பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர்

குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மதனா (வயது 33). இவர் சம்பவத்தன்று வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து வருவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மதனாவின் மாமியார் புஷ்பா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மதனாவை தேடி வருகின்றனர்.


Next Story