பெண் மாயம்


பெண் மாயம்
x

பெண் மாயம் ஆனார்.

கரூர்

கடவூர் அருகே உள்ள வீரக்கவுண்டம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம். இவரது மனைவி தங்கப்பொண்ணு (வயது 50). சமையல் கூலி தொழிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான தங்கப்பொண்ணுவை தேடி வருகின்றனர்.


Next Story