ஊட்டி ஏரியில் பெண் பிணமாக மீட்பு

ஊட்டி ஏரியில் பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
நீலகிரி
ஊட்டி
ஊட்டி படகு இல்லம் செயல்படும் ஏரியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்தினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் பெண்ணின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்து கிடந்த பெண்ணுக்கு 40 வயது இருக்கலாம். அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் குளத்தில் குதித்து இறந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






