குளச்சல் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு


குளச்சல் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சாவு
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:46 PM GMT)

குளச்சல் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் இறந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே பெத்தேல்புரம் வர்த்தான்விளையை சேர்ந்தவர் சோபிதர் (வயது 44), கொத்தனார். இவருடைய மனைவி விஜிலா (35). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

சோபிதர் - விஜிலா இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனம் உடைந்த விஜிலா கடந்த 26-ந் தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் கருகிய அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை விஜிலா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story