தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

தஞ்சையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை பள்ளியக்கிரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 59). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பயனில்லை. இதனால் மனமுடைந்த கலா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலாவின் மகன் சுப்பிரமணியன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலா உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story