தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
x

மது அருந்த பணம் தராததால் தாயை தாக்கிய‌ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது38) விவசாய தொழிலாளி. இவர் தனது தாய் ராணியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தாயை தாறுமாறாக திட்டி, கட்டையால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் தலையில் காயமடைந்த ராணி திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story