தீக்குளித்த பெண் சாவு

மூன்றடைப்பு அருகே தீக்குளித்த பெண் இறந்தார்.
நாங்குநேரி:
மூன்றடைப்பு அருகே உள்ள முதலைகுளத்தைச் சேர்ந்தவர் காமராஜ். அவருடைய மனைவி கவிதா (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். காமராஜ் குடிபழக்கம் உள்ளவர். இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கவிதா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் பலத்த காயமடைந்த கவிதாவை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





