மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்


மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்
x

மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்

சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள பூவாணத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். பூவாணம் ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ், விரிவாக்க உதவியாளர் தங்கையன், முதுநிலை ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story