செங்கம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் தின விழா


செங்கம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் தின விழா
x

செங்கம் தாலுகா அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. செங்கம் தாசில்தார் முனுசாமி, துணை தாசில்தார்கள் லதா, தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா பேசுகையில், 'பெண் குழந்தைகளுக்கு கல்வி மிக அவசியமானது. பெண் குழந்தைகள் கல்வி கற்றால் தான் அனைத்து துறைகளிலும் பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட முடியும்' என்றார்.

இதில் துணை தாசில்தார் துரைராஜ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.


1 More update

Next Story