மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா

தூத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலம் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு சார்பதிவாளர் பொன்மாரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் 18 பேருக்கு விவசாய கடனாக ரூ.40 லட்சத்து 72 ஆயிரமும், மாற்றுத்திறனாளி கடனாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் வழங்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





