தொழிலாளி அடித்து கொலை


தொழிலாளி அடித்து கொலை
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 19 Dec 2022 6:47 PM GMT)

டாஸ்மாக் கடை யில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட் டார். இது தொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

செட்டிப்பாளையம்

டாஸ்மாக் கடை யில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட் டார். இது தொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலாளி

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 39). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், ஞான பிரகாஷ் ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். அங்கு அமர்ந்து 3 பேரும் அங்குள்ள பாரில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து வெளியே வந்தனர். அப்போது பாருக்கு வெளியே மது வாங்க நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பலுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து பிரபாகரன் அங்கிருந்து தனது நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று சென்றார்.

வழிமறித்து தாக்குதல்

இந்த நிலையில் தகராறு செய்த அந்த 5 பேர் கொண்ட கும்பலும் ஒரு காரில் அவர்களுக்கு பின்னாடி வந்து கொண்டிருந்தனர். இதனிடையே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர்கள், காரில் வந்தவர்களுக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காரில் வந்த நபர்கள் அந்த ஸ்கூட்டரை முந்தி சென்று வழிமறித்தனர். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் வந்த ஞானபிரகாஷ், தமிழ்செல்வன், பிரபாகரன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்கள் 3 பேரையும் தாக்கினர்.

அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஞானபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனிடையே அந்த கும்பல் ஆத்திரத்தில் பிரபாகரனை கீழே தள்ளி தென்னை மட்டையால் தாக்கியதுடன், அங்கே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரபாகரனை அவரது நண்பர்கள் மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story