புதுச்சத்திரம் அருகே தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


புதுச்சத்திரம் அருகே தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2023 12:30 AM IST (Updated: 6 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

புதுச்சத்திரம் அடுத்த ஏழூர் மேட்டு தெருவை சேர்ந்த செல்வம் மகன் சசிகுமார் (வயது 31). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பவித்ரா (27) என்ற மனைவியும், கதிரேசன் (5) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஏழூர் ஏரி பகுதியில் சசிகுமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உறவினர்கள் சசிகுமாரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story