புதுச்சத்திரம் அருகே தறித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

புதுச்சத்திரம் அடுத்த ஏழூர் மேட்டு தெருவை சேர்ந்த செல்வம் மகன் சசிகுமார் (வயது 31). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பவித்ரா (27) என்ற மனைவியும், கதிரேசன் (5) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஏழூர் ஏரி பகுதியில் சசிகுமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த உறவினர்கள் சசிகுமாரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





