விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

வாணாபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேலந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாலமுரளி (வயது 30), கூலி தொழிலாளி.

இவரது மனைவி ராஜேஸ்வரி (21). இவர்களுக்கு 6 மாத குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 16-ந் தேதி வாணாபுரம் அருகே பெருந்துறைப்பட்டு டாஸ்மாக் கடை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து பாலமுரளி மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story