விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:45 PM GMT)

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி தாலுகா ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் சிவக்குமார் (வயது 45). தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக, மனமுடைந்து இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story