விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

மகனுக்கு திருமணமாகாததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திட்டச்சேரி பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 56).தொழிலாளி. இவர் தனது மகனுக்கு திருமணம் ஆகவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் ரவி சம்பவத்தன்று வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story