விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2023 12:30 AM IST (Updated: 14 March 2023 3:08 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடும்பாறை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

மயிலாடும்பாறை அருகே உள்ள மண்ணூத்து கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பசுபதி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிமலை தனியார் எஸ்டேட்டில் வனராஜ் தங்கி வேலை செய்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்து போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வனராஜ் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் மனமுடைந்த வனராஜ், கடந்த 9-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வனராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story