தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கெங்கவல்லி:-
கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி வடக்கு வீதியை சேர்ந்தவர் சின்னசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி. சின்னசாமி கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் தினந்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். இந்த நிலையில் நேற்று சின்னசாமி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த சின்னசாமி விஷம் குடித்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





