தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

ஏர்வாடி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள டோனாவூர் தபால்நிலைய தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் ஏசுதாசன் (வயது 48). தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, போதையில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் மது போதையில் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜாய்ஸ் கிரேனாப்பு என்பவரிடம் தகராறு செய்தார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி பாஸ்கர் ஏசுதாசன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.


Next Story