தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:47 PM GMT)

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அடுத்துள்ள சங்கரலிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 62), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. முத்துராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் முத்துராஜ் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு பூதப்பாண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story