தொழிலாளி விஷம்குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம்குடித்து தற்கொலை
x

பாவூர்சத்திரம் அருகே தொழிலாளி விஷம்குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பூவனூர் வீரபுத்திரநாடானூரை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தங்கத்துரை மட்டும் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்ட இவர் நேற்று காலையில் பிராந்தியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து (விஷத்தை) குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story