தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள கப்பியறை மருதன்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது46), கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மகேஷ் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவரை மனைவி ஸ்ரீவித்யா தட்டி கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மகேஷ் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story