தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குளுமைக்காடு பகுதியை ேசர்ந்தவர் செல்வராஜ் (வயது 58), தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த ஆண்டுக்கு இறந்து விட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வராஜ் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ரதீஷ் இரணியல் போலீசில் புகார் செய்தார் அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story