தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

குலசேகரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 56), தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரகலா. இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஜாண்சனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சம்பவத்தன்று ஜாண்சன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாண்சனை, உறவினர்கள் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாண்சன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story