தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா, தென்னிலைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மன விரக்தியில் இருந்த சுப்பிரமணி நேற்று காலை விஷ மருந்தை குடித்துவிட்டு அவரது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story