தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

சேரன்மாதேவியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி மேலவடக்கு தெருவைச் சேர்ந்த இசக்கி மகன் செந்தில்குமார் வயது (வயது 42). கூலித்தொழிலாளி இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் கடன் தொல்லையால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில்குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார் உடனடியாக அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story