தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஆற்காடு அருகே குடும்ப தகராறில் மனைவி, குழந்தைகளை வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டு கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

கூலித்தொழிலாளி

ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் சபீர் பாஷா (வயது 37). வெல்டிங் கடையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் இவருக்கும் மனைவி ஆயிஷாமாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் சபீர் பாஷா தனது மனைவி குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு வீட்டின் உள்பக்கமாக கதவை தாழ்பாள் போட்டுக் கொண்டுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அவரது மனைவி ஆயிஷாமா மற்றும் பிள்ளைகள் சிறிது நேரம் பார்த்து விட்டு அருகே இருந்த தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது சேலையால் மின்விசிறியில் சபீர் பாஷா தூக்குப்போட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

அவரை மீட்டு உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சபீர் பாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story