தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் விஷ்ணுகாந்த் (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். விஷ்ணுகாந்துக்கு மதுபழக்கம் உள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனுடன் சொந்த ஊரான திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு சென்று விட்டார். இதனால் விஷ்ணுகாந்த் தனது மனைவி, மகன் பிரிந்து சென்ற விரக்தியில் இருந்து வந்தார். தினமும் மது குடித்து வந்து உள்ளார். சம்பவத்தன்று கோவில்பாளையம் பகுதியில் மரத்தில் துணியால் தூக்குப்போட்டு விஷ்ணுகாந்த் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story