தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆற்காட்டில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை
ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 40), மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி பாரதி. இவர்களது மகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீரராகவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இந்தநிலையில் பாரதி வாலாஜாவை அடுத்த பாலு செட்டி சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த வீரராகவன் கடந்த 5-ந்் தேதி மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






