மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:45 PM GMT)

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் பாண்டி என்ற பாண்டியராஜன் (வயது 45). கூலித்தொழிலாளியான இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பாண்டி நெட்டூர் விலக்கு காட்டுப்பகுதிக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்து செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் ெதரிவித்து மயங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாண்டியை மீட்டு ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story