விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மருத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50), கூலித் தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

ஏழுமலை உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நிலத்துக்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story