விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

திருப்பரங்குன்றம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 47). கூலி தொழிலாளி. இவர் மனைவி இறந்ததால் 11 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story