காஞ்சிக்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


காஞ்சிக்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x

காஞ்சிக்கோவில் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை காஞ்சிக்கோவில் அருகே உள்ள தம்பிக்கலை அய்யன் கோவில் என்ற ஊரைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது50). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு பழனியம்மாள் (45) என்ற மனைவி உள்ளார்.

குணசேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்ததால் அவரை விட்டு பழனியம்மாள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதன்காரணமாக தனியாக குணசேகரன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிக்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story