கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்து தொழிலாளி சாவு


கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
x

ஓசூரில் கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்து தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30). கட்டிட தொழிலாளி. தற்போது ஓசூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இவர் ஓசூர், முனிதேவி நகரில் ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story