மது என நினைத்து விஷம் அருந்திய தொழிலாளி சாவு

ஓசூரில் மது என நினைத்து விஷம் அருந்திய தொழிலாளி இறந்தார்.
ஓசூர்:
ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று ரமேஷ் மது என்று நினைத்து தவறுதலாக விஷத்தை குடித்து விட்டார். இதில் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





