விபத்தில் தொழிலாளி சாவு


விபத்தில் தொழிலாளி சாவு
x

விபத்தில் தொழிலாளி சாவு

நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் ஒருவர் தடுமாறி சென்றார். இதையடுத்து அங்கிருந்த பள்ளத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து அவர் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் இறந்தவர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த சித்தன் மகன் ஜெயக்குமார் (வயது 35) என்பதும், தொழிலாளியான இவர் சேலத்தில் இருந்து அரிசி மூட்டையை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து சென்றபோது, கட்டுப்பாட்டை இருந்து விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது.


Next Story