சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு


சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 Dec 2022 6:45 PM GMT (Updated: 26 Dec 2022 6:47 PM GMT)

சிகிச்சை பலனின்றி தொழிலாளி சாவு

கோயம்புத்தூர்

பீளமேடு

கோவை பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 47). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பீளமேடு பயோனியர் மில் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். தொடர்ந்து அவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கனகராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கனகராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story