தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x

பட்டாசு வெடித்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா ஆசிரியர் காலனி பின்புறம் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 42), இவரும் இவரது நண்பர் ராஜேந்திரன் (36) என்பவரும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் இருவருக்கும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்களுக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சுரேஷ் ரத்தினகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜேந்திரன் வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் சுரேஷ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story