தொழிலாளி சாவு

மானூர் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி இறந்தார்.
மானூர்:
மானூர் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மானூர் அருகே உள்ள எட்டான்குளம் டாஸ்மாக் கடை பகுதியில் அளவுக்கு அதிகமாக மதுக்குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து மானூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





