தொழிலாளி சாவு


தொழிலாளி சாவு
x

சுத்தமல்லி அருகே வீட்டில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே வடக்கு சங்கன்திரடு தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் நாராயணன் (வயது 40) கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 4 நாட்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டில் கீழே விழுந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது மனைவி பார்வதி (32) கொடுத்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story