மொபட் மீது கார் மோதி தொழிலாளி சாவு


மொபட் மீது கார் மோதி தொழிலாளி சாவு
x

கந்தம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள ராமதேவம் ஓட கிணற்று புதூரைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 58). இவர் சமத்துவபுரம் அருகே உள்ள இரும்பு உருக்காலையில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக இவர் தனது மொபட்டில் தொட்டியந்தோட்டம் நான்கு ரோடு பிரிவு என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மொபட் மீது மோதிவிட்டு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சண்முகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story