கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 7:38 AM GMT)

நாமக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

நாமக்கல்

நாமக்கல் காவேட்டிப்பட்டி சிட்கோ காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது45). தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை சிட்கோ காலனி ஊர் பொது கிணற்றில் ராமசாமி தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் அவரை கிணற்றில் இருந்து வெளியே மீட்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து அவரது மனைவி விஜயா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story