வாகனம் மோதி தொழிலாளி சாவு

வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆம்பூர்-வாணியம்பாடி சாலையில் வீரக்கோவில் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமுவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் ராமுவை பரிசோதனை செய்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





