குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு


குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:47 PM GMT)

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

இரணியல் அருகே மணக்கரை புளியன்விளை பகுதியைச் சேர்ந்தவர் மரிய சிலுவை (வயது 65), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில் உள்ள பாம்பாட்டிகுளத்தில் குளிக்கச் சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடி குளத்துக்கு சென்றனர். அப்போது குளத்தின் கரையில் அவரது செருப்பு இருந்ததை கண்டனர். உடனே குளத்துக்குள் இறங்கி தேடினர். அப்போது, மரியசிலுவை குளத்துக்குள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி இரணியல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குளத்துக்குள் இறந்து கிடந்த மரியசிலுவையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story