பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

செஞ்சி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி,
செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 55) விவசாய கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஊரணித்தாங்கள் கிராமத்தின் அருகில் உள்ள ஒரு பாலத்தின் சுவற்றில் படுத்து தூங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





