மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் குரங்குசாவடியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மீன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் கண்ணா (வயது 27). இவர் சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலம் குரங்குசாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையை கடக்க முயன்றபோது நிலைதடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

சாவு

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பிரதீப்பை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பிரதீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story