கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
உப்பிலியபுரத்தை அடுத்த பச்சபெருமாள்பட்டி அம்பலக்காரத் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு உள்ள கழிவு நீர் வாய்க்காலை தாண்ட முயன்றவர். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்ைச பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





