கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி


கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
x

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30), தொழிலாளி. இவர், திருப்பத்தூர் அருகே தாதனவலசை கொல்லகொட்டாய் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சிலம்பரசன் மாமியார் வீட்டின் அருகே உள்ள கிணற்றின் வழியாக நடந்து சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சிலம்பரசனுக்கு சுகந்தி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story