பழனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


பழனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 7 March 2023 2:00 AM IST (Updated: 7 March 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள ஆயக்குடியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவர், ஆயக்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள நண்பர் ஒருவர் வீட்டிற்கு நடந்து சென்றார். பின்னர் அவர், நண்பரது வீட்டின் மொட்டை மாடிக்கு ஏறி சென்றார்.

அப்போது அவர் கையை தூக்கியதால் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்வயர் மீது பட்டது. இதில் வடிவேல் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story