மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 10:10 AM GMT)

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

கோயம்புத்தூர்


பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிண்டு (வயது 25). கட்டிட தொழிலாளியான இவர் கோவை சித்ரா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். அப்போது இவர் மின்சார ஒயர் மீது கவனிக்காமல் கால் வைத்து விட்டதாக தெரிகிறது . இதில் மின்சாரம் தாக்கி படிக்கட்டில் உருண்டு விழுந்தார். படுகாயமடைந்த இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story