விபத்தில் தொழிலாளி சாவு


விபத்தில் தொழிலாளி சாவு
x
சேலம்

மேட்டூர்

மேட்டூர் தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர், மேட்டூர் மாதையன் குட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன சுப்பிரமணி உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story